Sangam period People named after animals
Sangam period People named after animals
1) அஃதை- உயர்ந்த யானைகளை கொண்டு இருப்பவன்
2) ஆந்தையார்-ஆதன் தந்தை தான் “ஆந்தையார்”என மருவியது.
3) அண்டர்- ஆயர் குடியினரை குறிக்கும்
4) அணிலாடு முன்றிலார்- இவர் ஒரு புலவர் தன் வீட்டு முற்றத்தில் அணில் விளையாடுவதை
பார்த்து அதனை பாடலாக வடித்தார். அதனால் இவர் “அணிலாடு முன்றிலார்”எனப்பட்டார்.
5) ஆடு கோட்பாட்டு சேரலாதன்- எதிரிகள் கவர்ந்து சென்ற ஆடுகளை மீட்டவன் எனப்பொருள்.
6) ஆதி மந்தி- குதிரை ஓட்ட ஒலியை குறிக்கும். குதிரை நடை போல் குதித்து ஆடும் ஆடற்கலையில்
வல்லவள்.
7) புலிகடி மால்-புலியை வென்றதால் இப்பெயர் ஏற்பட்டு இருக்கலாம்.
8) இரும்பிடர்த்தலையார்- யானையின் பெரிய கழுத்தை போல் இவரது கழுத்து இருந்ததால்
இப்பெயர் ஏற்பட்டது.
9) இளவெயினனார்- வேட்டுவ மரபினர்
10) எருமையூரன்- எருமை நாடு என்னும் குட நாட்டை ஆண்டவன்
11) எருமை வெளியனார்
12) எழு உப்பன்றி நாகன் குமரனார்
13) வேங்கை மார்பன்
14) கழைதின் யானையார்-யானை கழைத் தின்பதை பாடி இருப்பதால் இப்பெயர் ஏற்பட்டு இருக்கலாம்.
15) கடுமான்-விரைந்து செல்லும்
குதிரைகளை உடையவன்
16) குப்பைக்கோழியார்-தன் பாடலில் குப்பைகொழியின் தனிப்போரினை கூறியதால் இப்பெயர்
ஏற்பட்டது.
17) குதிரை நரியனார்-குதிரைகள் கட்டும் இடத்தை உவமையாக கூறியதால் இப்பெயர் ஏற்பட்டு உள்ளது.
18) குறுங்கோழியூர் கிழார்
19) கூகைக் கோழியார்
20) கோவர்த்தனார்
21) கோழிக் கொற்றன்.
22) நரிவெருத் தலையார்
23) மத்தி- பரதவர் தலைவன்
Conclusion
We can learn from literature that many people of the Sangam period had names like this, but this may not have been their real names.
Comments